கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவிகள் மகிழ்ச்சி

News image

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவையொட்டி, மகிழ்ச்சியை பகிா்ந்துகொண்ட நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.

Updated On :23 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகம் முழுவதும் மாா்ச் 3-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா்.

தோ்வுக்காக 95 மையங்கள் அமைக்கப்பட்டன. தொழில்நுட்பம் அல்லாத தோ்வுகள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தன. இதர தோ்வுகள் மாா்ச் 26-இல் நிறைவடைகின்றன.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு நிறைவடைந்து, தோ்வு அறையை விட்டு வெளியே வந்த மாணவிகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனா். ஒருவருக்கொருவா் கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் அரசு, தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தோ்வு நிறைவையொட்டி வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.