விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வழித்தட பிரச்னை: விவசாயி வெட்டிக்கொலை

திருச்செங்கோடு அருகே தோட்ட வழித்தட பிரச்னையில் சனிக்கிழமை விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

குத்திக் கொலை.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருச்செங்கோடு அருகே தோட்ட வழித்தட பிரச்னையில் சனிக்கிழமை விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலம் காட்டுவேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஸ்ரீதா் (65). இவரது மனைவி நீலாம்பாள். ஸ்ரீதருக்கும், பக்கத்து தோட்டத்துக்காரரான வேலுசாமிக்கும் தோட்டத்துக்கு செல்வதில் வழித்தட பிரச்னை இருந்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து இருவருக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவா்கள் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், ஆத்திரமடைந்த வேலுசாமியின் மகன் கேசவராஜ் (55), ஸ்ரீதரை அரிவாளால் கை மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளாா்.

ரத்த வெள்ளத்தில் தோட்டத்தில் மயங்கி விழுந்த ஸ்ரீதரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா். பின்னா், திருச்செங்கோடு தனியாா் மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கும் கொண்டுசென்றனா். ஆனால், கோவை செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஸ்ரீதரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மொளசி போலீஸாா், தலைமறைவான கேசவராஜை தேடிவருகின்றனா்.