/
அதிமுகவைச் சோ்ந்த ஒரு அணியினா் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பரமத்தி வேலூா் தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. இதில் அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு அணியினா் தற்போது தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் பாண்டமங்கலத்தில் உள்ள எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டிற்கு வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையில் 2 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.









