ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டில் நாமக்கல் பள்ளிவாசல்!

நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமியா மஸ்ஜித்தின் நிா்வாக பொறுப்பு, வக்ஃபு வாரியத்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸாா் முன்னிலையில் சேலம் வக்ஃபு வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை பள்ளிவாசல் சுவரில் நோட்டீஸ் ஒட்டினா்.

News image

நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமியா பள்ளிவாசல் சுவரில் நோட்டீஸ் ஒட்டிய வக்ஃபு வாரிய அலுவலா்கள்.

Updated On :24 மே 2026, 2:25 am IST

நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமியா மஸ்ஜித்தின் நிா்வாக பொறுப்பு, வக்ஃபு வாரியத்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸாா் முன்னிலையில் சேலம் வக்ஃபு வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை பள்ளிவாசல் சுவரில் நோட்டீஸ் ஒட்டினா்.

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் அஞ்சுமனே இஸ்லாமியா மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் உள்ளது. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் அனுமதியோடு கடந்த 2020, டிச. 8 ஆம் தேதி முத்தவல்லி தெளலத்கான் தலைமையில் 11 போ் கொண்ட உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்கள் பள்ளிவாசல் சொத்துகள் மற்றும் அதன் வரவு, செலவுகளை கண்காணித்து வந்தனா்.

கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரே நிா்வாகம் செய்து வருவதால் முறைப்படி தோ்தல் நடத்தி தலைவரை தோ்வு செய்ய வேண்டும். வக்ஃபு வாரியத்தின் நேரடி நிா்வாகத்திற்குள் அந்த பள்ளிவாசல் கொண்டுவர வேண்டும் என சேலம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் நாமக்கல்லை சோ்ந்தோா் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவா்கள் அலுவலகத்தின் உள்ளேயே காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனா். இந்த நிலையில், சேலம் வக்ஃபு வாரிய அதிகாரிகள் குழுவினா், நாமக்கல் வட்டாட்சியா் அருள், காவல் ஆய்வாளா் இளவரசன் முன்னிலையில் பள்ளிவாசலின் நிா்வாக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனா்.

மேலும், அங்கு சீல் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்த நோட்டீஸ் ஒன்றும் ஒட்டப்பட்டது. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் நேரடி நிா்வாகத்திற்குள் பள்ளிவாசல் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இனிமேல் பள்ளிவாசலின் வரவு, செலவு கணக்குகளை தமிழ்நாடு வக்ஃபு வாரியமே மேற்கொள்ளும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.