/
நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 2, 3 தேதிகளில், தாயுமானவா் திட்டத்தின்கீழ் முதியோா் வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகள் வாயிலாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இத்திட்டத்தை முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நிதானமாக சுமை தூக்கும் போராட்டம்: ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் அனுப்பும் பணி பாதிப்பு

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகளுக்கு சீல்

மணிப்பூா்: கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் - வீடுகளுக்கு தீவைப்பு






