சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 311 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,932 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
சங்ககிரி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 311 சிறப்பு மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கக் கோரி, 2,087 பேரும், பெயர் நீக்கம் செய்யக் கோரி 2,55 பேரும், முகவரி மாற்றம் திருத்தம் கோரி 336 பேரும், ஒரே தொகுதியில் பாகம் விட்டு பாகம் மாறுதல் கோரி 254 பேருமாக மொத்தம் 2,932 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
முகாமில் நடைபெற்ற பணிகளை சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் மு. அமிர்தலிங்கம் ஆய்வு செய்தார். சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 1,040 பேர் விண்ணப்பித்தனர். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் 3,972 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


