தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி சாவு

கெங்கவல்லி அருகே தெடாவூரில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சைப் பலனின்றிஉயிரிழந்தார்.

Updated On :24 ஜனவரி 2019, 4:41 am IST

கெங்கவல்லி அருகே தெடாவூரில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சைப் பலனின்றி
உயிரிழந்தார்.
கெங்கவல்லி அருகே தெடாவூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் தினேஷ் (20), அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகள் செல்வமணி (20). ஒரே சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரியான இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து இருவரது பெற்றோர்க்கும் தெரியவந்தது. இந்நிலையில், இவர்களிருவரும் சகோதர உறவு என்பது தெரியவந்ததையடுத்து, காதலித்த இருவரும் மனமுடைந்து காணப்பட்டனர். இதில், செல்வமணி கடந்த 4-ஆம் தேதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த 9-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், களைக்கொல்லிக்கு வைத்திருக்கும் பூச்சிமருந்தை தினேஷ் குடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் தினேஷ் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.