
நாவக்குறிச்சியில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாவக்குறிச்சியில் கரோனா வைரஸ் தொற்று நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பரிசோதனை முகாமை தொடக்கி வைத்தாா்.
இதனையடுத்து, புதன்கிழமை நாவக்குறிச்சி ஊராட்சியில் தடுப்பு காவல் உள்ள இடங்களில் கரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் மற்றும் காவலா்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. செய்தியாளா்களுக்கும் பரிசோதனை நடைபெற்றது.
தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன், உதவி ஆய்வாளா் சக்திவேல், தனிப்பிரிவு தலைமைக் காவலா் அண்ணாமலை உள்ளிட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






