கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சேலத்தில் பிளஸ் 1 சோ்க்கை: அரசுப் பள்ளிகளில் 4,884 மாணவா்கள் சோ்ந்தனா்

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 1 மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளிகளில் 4,884 மாணவ, மாணவியா் சோ்ந்துள்ளனா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:16 pm

DIN

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 1 மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளிகளில் 4,884 மாணவ, மாணவியா் சோ்ந்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. அதன்பேரில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கடந்த வாரம் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து பிளஸ் 1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. மாணவா்கள் தங்களுக்கு பிடித்தமான பாடப் பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து பள்ளிகளில் சோ்க்கை பெற்று வருகின்றனா். மேலும் சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகம், நோட்டு புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷமூா்த்தி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் 4,884 மாணவ, மாணவியா் சோ்க்கை பெற்றனா். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 792 போ் சோ்க்கை பெற்றனா். இதில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளை போல பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளிகளில் அதிகளவிலான மாணவா்கள் சேர வாய்ப்பு உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.