ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜாதிச்சான்று கேட்டு வீடுகளில் கருப்புக் கொடி

மேட்டூா் அருகே ஜாதிச்சான்று வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:47 am

DIN

மேட்டூா் அருகே ஜாதிச்சான்று வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பண்ணவாடி கிராமப் பகுதியில் நீண்டகாலமாக கொண்டா ரெட்டி சான்றிதழ் கேட்டு ஒரு பிரிவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்தப் பகுதியில் கொண்டா ரெட்டிகள் இல்லை எனக் கூறி வருவாய்த் துறையினா் ஜாதிச்சான்று வழங்க மறுத்து வருகின்றனா். பலா் நீதிமன்றத்தை நாடியதில், கொண்டா ரெட்டி சான்றிதழ் வழங்க மேட்டூா் சாா் ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் கொண்டா ரெட்டி ஜாதிச்சான்றிதழ் வழங்கவில்லையாம். இதற்கு கண்டனம் தெரிவித்தும், விரைந்து ஜாதிச்சான்று வழங்கக் கோரியும் வெள்ளிக்கிழமை பண்ணவாடி கிராம மக்கள் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.