கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா!

கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அமெரிக்கா அழித்தது பற்றி...

News image
கண்ணிவெடி பதிக்கும் ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா- Photo: US Central Command
Updated On :11 மார்ச் 2026, 5:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானின் 16 கடற்படை கப்பல்களை அழித்ததாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போரைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

டிரம்ப்பை எச்சரிக்கும் விதத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு காவலர்கள் (ஐஆர்ஜிசி) வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் தொடரும் பட்சத்தில் ஒரு லிட்டர் எண்ணெய்கூட ஹோர்முஸ் வழியாக கொண்டு செல்ல முடியாது என்று சவால் விடுத்தது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் 16 கப்பல்கள் உள்பட ஈரானின் பல கடற்படை கப்பல்களை தாக்கி அழித்ததாக அமெரிக்காவின் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இதுதொடர்பான காணொலியையும் அமெரிக்க பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இதனிடையே ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் ஏதேனும் கண்ணிவெடிகள் வைத்திருந்தால் உடனடியாக அதனை ஈரான் அகற்ற வேண்டும். கண்ணிவெடி வைக்கப்பட்டு, அவற்றை அகற்றாமல் இருந்தால், இதுவரை இல்லாத வகையிலான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகு அல்லது கப்பல்களை அழிக்க போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணையை பயன்படுத்துகிறோம். கண்ணிவெடி பதிக்கும் கப்பல்களை தாக்கி முற்றிலும் அழித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.