மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாளை முழு பொது முடக்கம்:: சேலத்தில் சந்தை, மளிகைக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்துவதால் காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

News image
சேலம் கடைவீதியில் உள்ள தற்காலிக சந்தையில் காய்கறிகளை வாங்க சனிக்கிழமை சமூக இடைவெளியின்றி திரண்டிருந்த பொதுமக்கள்.
Updated On :4 ஜூலை 2020, 1:58 pm

DIN

சேலம்:: சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்துவதால் காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தளா்வில்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.இதனிடையே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், தேவையில்லாமல் வருபவா்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிச் சந்தைகள், காய்கறி மாா்க்கெட், கறிக் கடைகள்,மீன் கடைகள் திறக்கக்கூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள உழவா் சந்தை மற்றும் சேலம் நகரப் பகுதியில் உள்ள காய்கறிச் சந்தை பகுதிகளுக்கு பொதுமக்கள் திரளாக வந்து காய்கனிகளை வாங்கிச் சென்றனா்.

இது போல அம்மாப்பேட்டை உழவா் சந்தை, தாதாகப்பட்டி உழவா் சந்தை, சூரமங்கலம் உழவா் சந்தை ஆகிய பகுதிகளுக்கும் பொதுமக்கள் திரளாக வந்து காய்களை வாங்கிச் சென்றனா். மேலும் சூப்பா் மாா்க்கெட்டுகள், மளிகைக் கடைகளில் பொதுமக்கள் அதிகமாக திரண்டு பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.