இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சங்ககிரி வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்தி விழா தொடக்கம் 

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்தி விழா சனிக்கிழமை தொடங்கியது. 

News image
ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கிய நவராத்திரி சிறப்பு பூஜையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமி கொலு பொம்மைகள்.
Updated On :17 அக்டோபர் 2020, 3:07 pm

DIN

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்தி விழா சனிக்கிழமை தொடங்கியது. 

சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ளஅருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி கோயில், மங்கமலையில் உள்ள அருள்மிகு மங்கமலைபெருமாள், ஒருக்காமலையில் உள்ள  குடவரையில் பெருமாளின் திருநாமங்களான பாதங்கள், சங்கு, சக்கரம் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளில் நேரடியாக கோயிலுக்கு சென்று வழிபடாத பக்தர்கள் புரட்டாசி மாத கடை சனிக்கிழமையையொட்டி கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.  

Story image

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
 

அதிகமான பக்தர்கள் கோயில்களில் தீர்த்தங்களையும், பொங்கல்களையும் பெற்றுச்சென்று புரட்டாசி மாத விரதங்களை பூர்த்தி செய்தனர். சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள வஸந்தவல்லபராய பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

வி.என்.பாளையம் பெருமாள் கோயிலில் நவராத்தி தொடக்கம் 

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்தி தொடக்கத்தினையொட்டி மூலவர் சுவாமிகளுக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

அதனையடுத்து கோயில் வளாகத்தில் சனிக்கிழமை  மாலை பல்வேறு சுவாமி சிலைகள் கொண்ட நவராத்தி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லஷ்சுமி தேவியின் பக்தி பாடல்களை பாடி வழிப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.