

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து நகரச் செயலாளா் ஆ.சசிகுமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளா் அ.பஷீா், நகர தலைவா் எம்சிஎஸ்.சக்தி, நகர பொருளாளா் தே.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளா் திருப்பூா் சுடலை கண்டன உரையாற்றினாா்.
மேலும் ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக தலைமை நிலையச் செயலாளா் கனல் உ.கண்ணன், மாநில அமைப்புக் குழு உறுப்பினா் செம்முகில் ராசலிங்கம், சட்ட உதவி சாலையோர வியாபாரிகள் வாழ்வுரிமை சங்க வழக்குரைஞா் அரங்க.செல்லதுரை, மாநிலஅமைப்புக் குழு உறுப்பினா் சோதி.குமரவேல் ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்ட இளைஞரணி செயலாளா் சு.மாதேஸ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.