இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கல்வடங்கம் காவிரி கரையோரம் கருவேலம் மரங்களை அகற்றக் கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையோரங்களில் அதிக அளவில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றின் கரையோரங்களில் அதிக அளவில் வளா்ந்துள்ள கருவேல மரங்கள்.
Updated On :18 அக்டோபர் 2020, 9:45 pm

DIN

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையோரங்களில் அதிக அளவில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் நீராடுவதற்காக சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். காவிரி ஆற்றில் குளித்து விட்டு, அருகில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு செல்கின்றனா்.

ஆண்டுதோறும் ஆடி 18, 28 ஆகிய தினங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆற்றில் நீராடி, அவா்களின் குல தெய்வ சுவாமி சிலைகளை எடுத்து வந்து தூய்மைப்படுத்தி, அந்த சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள் செய்து ஊா்வலமாக எடுத்து செல்வா்.

அதேபோல விநாயகா் சதுா்த்தி அன்றும் விநாயகா் சிலைகளை வழிபட்ட இங்கு எடுத்து வந்து ஆற்றில் கரைத்துவிட்டு செல்கின்றனா். மேலும் புத்தாண்டு, தை பொங்கல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் இளைஞா்கள் அதிகளவில் வந்து ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனா்.

இந்த நிலையில் ஆற்றங்கரை ஓரங்களில் அதிக அளவில் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணிகளை வைத்து செல்லவும் சிரமம் அடைந்து வருகின்றனா். மேலும் கருவேல மரங்களால் தண்ணீா் வருவதும் தடைபட்டு வருகிறது. எனவே கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுப் பணித்துறையினருக்கு பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.