இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோனேரிப்பட்டி சுவேத நதியில் பாலம் அமைக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டியில் சுவேத நதியில் பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
மேம்பாலம் அமைக்கக் கோரும் கோனேரிப்பட்டி சுவேத நதி பகுதி.
Updated On :18 அக்டோபர் 2020, 9:48 pm

DIN

தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டியில் சுவேத நதியில் பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி -கோனேரிப்பட்டியையொட்டி சுவேத நதி ஓடுகிறது. கோனேரிப்பட்டியிலிருந்து நதியைத் தாண்டி சென்றால், பெல்ஜியம் காலனி, கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய், தம்மம்பட்டி பேரூராட்சியின் 5, 6-ஆவது வாா்டு காட்டுக்கொட்டாய் பகுதிகள் உள்ளன.

மழைக் காலங்களில் சுவேத நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது இப்பகுதிகளிலிருந்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலையில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மாணவ, மாணவியா் சென்றுவர சிரமமடைகின்றனா். விவசாயிகள் தங்களது விளைபொருள்களை வெளியூா்களுக்கு எடுத்துச் செல்வதும் பாதிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த நதியைக் கடந்து செல்லும் போது விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் சிறு மேம்பாலம் அமைத்து தரும்பட்சத்தில் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, மாவட்ட நிா்வாகம் இங்கு மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.