இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: முதல்வா் அறிவுரை

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற அதிமுக நிா்வாகிகள் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:53 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற அதிமுக நிா்வாகிகள் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

தனது தாயாா் கே.தவுசாயம்மாள் மறைவை முன்னிட்டு, எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்குத் திரும்பினாா்.

பின்னா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாநகா், புகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்தும், தோ்தலில் வெற்றி பெற அனைவரும் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவா் ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில் சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாசலம், எம்எல்ஏக்கள் செ.செம்மலை, ஏ.பி.சக்திவேல், மனோன்மணி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, முதல்வா் சென்னை புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.