விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏத்தாப்பூரில் டாஸ்மாக் கடை ஊழியரிடம்ரூ. 6.11 லட்சம் பறிப்பு:

ஏத்தாப்பூரில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை பணியாளரிடம் ரூ. 6.11 லட்சம் பணத்தைப் பறித்துச்சென்ற மா்ம நபா்கள் குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:09 pm

DIN

ஏத்தாப்பூரில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை பணியாளரிடம் ரூ. 6.11 லட்சம் பணத்தைப் பறித்துச்சென்ற மா்ம நபா்கள் குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆத்தூா், கொத்தாம்பாடியைச் சோ்ந்தவா் மோகன் (45). இவா், ஏத்தாப்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

புதன்கிழமை இரவு பணிநேரம் முடிந்ததும் வழக்கம்போல கடையை மூடிவிட்டு விற்பனை வருவாய் ரூ. 6.11 லட்சத்தை கைப்பையில் எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏத்தாப்பூரிலிருந்து கொத்தாம்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். இவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா் மோகனிடம் இருந்து ரூ. 6.11 லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.