மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொளத்தூர்: யானை தூக்கி வீசியதில் தொழிலாளி படுகாயம்

​சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரில் யானை தூக்கி வீசியதில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :15 ஆகஸ்ட் 2021, 5:47 am

DIN


சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரில் யானை தூக்கி வீசியதில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நீதிபுரம் ஏரி. இந்த ஏரி அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. ஏரியில் மீன் பிடிக்க குத்தகைக்கு எடுத்தவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (38) என்பவரை காவலுக்காக நியமித்திருந்தார். 

நேற்று (சனிக்கிழமை) இரவு தேவராஜ் ஏரிக்கரையில் உள்ள கொட்டகையில் படுத்து இருந்தார். அப்போது சப்தம் கேட்கவே எழுந்து பார்த்த அவர் தனது கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தார். மிக அருகில் ஒற்றை ஆண் யானை ஒன்று நின்றிருந்திருக்கிறது. இவர் சுதாரிப்பதற்குள் யானை துதிக்கையால் தூக்கி அவரை அருகிலிருந்த விவசாய நிலத்தில் வீசியது. பின்னர் பிளிறியபடி யானை அங்கிருந்து சென்றது. 

தேவராஜனின் அலறல் கேட்டு கிராம மக்கள் தீப்பந்தங்கள் உடன் வந்து அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வருவாய்த் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.