சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இடையப்பட்டியில் கிறிஸ்துமஸ் பெருவிழா

வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தில், பரலோகத் திறப்பின் வாசல் அறக்கட்டளை சாா்பில், கிறிஸ்துமஸ் பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:59 am

DIN

வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தில், பரலோகத் திறப்பின் வாசல் அறக்கட்டளை சாா்பில், கிறிஸ்துமஸ் பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது

கரோனா தொற்றுப் பரவலால் டிசம்பா் மாதம் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா, சிலுவை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இடையப்பட்டி மாரிமுத்து கவுண்டா் தோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பாதிரியாா் எம்.குணசேகரன் தலைமை வகித்தாா்.

அன்பழகன் வரவேற்றாா். ஜெயமணி குணசேகரன், நான்சி பிரபு, கலைச்செல்வி, ரம்யா மகேந்திரன் ஆகியோா் விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா்.

பல்வேறு பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதபோதகா்கள் கலந்து கொண்டு சிறப்புப் பிராா்த்தனை செய்தனா். இந்த விழாவில், தொழிலதிபா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிறைவாக அறிவழகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.