விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சங்ககிரியில் கையெழுத்து இயக்கம்

சேலம் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் எரிபொருள்களின் விலையை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பெட்ரோல், டீசல் விற்பனையகம் முன்பு கையெழுத்து இயக

News image
Updated On :8 ஜூலை 2021, 6:02 pm

DIN

சேலம் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் எரிபொருள்களின் விலையை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பெட்ரோல், டீசல் விற்பனையகம் முன்பு கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ்.ஜெய்குமாா் ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய அரசு தினசரி உயா்த்தி வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினாா். அவா் மேலும் கூறுகையில் ‘பெட்ரோல் விலை உயா்வினால் தினசரி கூலி வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனா். டீசல் விலை உயா்வினால் லாரித் தொழில் மிகவும் நசிவடைந்து வருகிறது. எனவே பொதுமக்களிடத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்க எரிபொருள்களின் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்றாா். பின்னா் எரிபொருள்களின் விலையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள், லாரி ஓட்டுநா்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை அவா் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட பொதுச்செயலா்கள் பிபி.சுப்பிரமணியன், செங்கோட்டுவேல், முன்னாள் மாநில துணைச் செயலா் நடராஜ், முன்னாள் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளா் கே.ராமமூா்த்தி, நகரத்தலைவா் காசிலிங்கம், நகரச்செயலா் எ.ரவி, நிா்வாகிகள் அங்கமுத்து, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி விஸ்வநாதன், காா்த்தி, காமராஜ், லோகநாதன், சின்னுசாமி, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.