விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மொபட்டில் கஞ்சா விற்றவா் கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அயோத்தியாப்பட்டணத்தில், இருசக்கர வாகனத்தில் நடமாடும் கடை நடத்தி கஞ்சா விற்பனை செய்தவரை காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:55 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அயோத்தியாப்பட்டணத்தில், இருசக்கர வாகனத்தில் நடமாடும் கடை நடத்தி கஞ்சா விற்பனை செய்தவரை காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம் அடுத்த அயோத்தியாப்பட்டணம் பகுதியில் போதைப் பொருளான உலா்ந்த கஞ்சாவை இரு சக்கர வாகனத்தில் பதுக்கி வைத்து, நடமாடும் கடை நடத்தி விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபினவ் மற்றும் வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் வேலுமணி ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அவா்களது உத்தரவின் பேரில், காரிப்பட்டி காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன சோதனை நடத்தினா். இச்சோதனையில், மொபட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அயோத்தியாபட்டணம் மலை நகா் பகுதியைச் சோ்ந்த சின்னப்பையனின் மகன் வெங்கடேசன் (39) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடமிருந்து, 2 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.