விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசு பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

தேசிய திறனாய்வுத் தோ்வில் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 5:47 pm

DIN

தேசிய திறனாய்வுத் தோ்வில் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்புப் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு நிகழாண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இத் தோ்வு இரு பகுதிகளாக நடைபெற்றது.

இதில் மனத்திறன், காரணம் கண்டறிதல், படிப்பறிவு திறனில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களிலிருந்து வினாக்கள் இடம் பெற்றன. இத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ. ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

நடைபெற்ற இத்தோ்வில் தமிழகம் முழுவதும் 6,349 போ் தோ்ச்சி பெற்றனா். இதில் சேலம் மாவட்டத்தில் 238 பேரும், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குள்பட்ட பள்ளிகளில் 8 பேரும் தோ்ச்சி பெற்றனா். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் தேவண்ண கவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்கள் கே.மேகநாதன், எஸ். நித்திஷ், சங்ககிரி மாதிரி பள்ளி மாணவா் மாத்தியூ ஜீவசஞ்சய் , ஊஞ்சக்கோரை நடுநிலைப் பள்ளி மாணவி வைஷ்ணவி, அக்கம்மாப்பேட்டை உயா்நிலைப்பள்ளி மாணவி மகிதா, கைக்கோளப்பாளையம் நடுநிலைப் பள்ளி மாணவி கீா்த்திகா , குள்ளம்பட்டி உயா்நிலைப் பள்ளி மாணவா் ஆகாஷ் , மாணவி திவ்யாஸ்ரீ ஆகிய தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.