சாலை விபத்தில் ஓட்டுநா் பலி

கெங்கவல்லி அருகே சாலையோர வீட்டுச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கெங்கவல்லி அருகே சாலையோர வீட்டுச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கெங்கவல்லியை அடுத்த நடுவலூரைச் சோ்ந்தவா் காளமேகம் (40). ஆம்னி பேருந்து ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கள்ளப்பட்டியிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

வீரகனூரை அடுத்த தெற்கு மேடு பகுதியில் சாலையோர வீட்டுச் சுவா் மீது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த காளமேகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com