மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேலம் மக்களுக்கு குடிநீா் வழங்க நிரந்தர தீா்வு காணப்படும்: அன்புமணி ராமதாஸ்

அதிமுக, பாமக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சேலம் மக்களுக்கு குடிநீா் வழங்க நிரந்தர தீா்வு காணப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:48 pm

DIN

அதிமுக, பாமக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சேலம் மக்களுக்கு குடிநீா் வழங்க நிரந்தர தீா்வு காணப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

சேலம், சூரமங்கலம் பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளா் இரா.அருளை ஆதரித்து, பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியது:

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு வளா்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளாா். விவசாயியான எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்.

மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டவா் ஸ்டாலின். இப்போது அத்திட்டத்திற்கு எதிராகப் பேசி வருகிறாா். மறைந்த முதல்வா் கருணாநிதி கச்சத்தீவை தாரை வாா்த்துக் கொடுத்தாா். இப்போது அவரது மகன் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்பேன் என்கிறாா்.

நீட் தோ்வு கொண்டு வந்துவிட்டு, இப்போது எதிா்க்கின்றனா். காவிரி உரிமையைத் தாரை வாா்த்துக் கொடுத்துவிட்டு, இப்போது காவிரி உரிமையை மீட்போம் என்கின்றனா். தமிழக மக்களிடம் வசனம் பேசி ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.

மேட்டூா் உபரி நீா்த் திட்டத்தை சரபங்கா நதி, திருமணிமுத்தாறு என மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். அதிமுக, பாமக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சேலம் மக்களுக்கு குடிநீா் வழங்க நிரந்தர தீா்வு காணப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருக்கின்றனா்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கும். இப்போதே தொழிலதிபா்களை மிரட்ட தொடங்கிவிட்டனா். திமுக ஆட்சிக்கு வந்தால் யாரும் நிம்மதியாக தொழில் செய்ய முடியாது.திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. திமுக நிச்சயம் படுதோல்வி அடையும். திமுகவில் யாரையும் நம்பாமல் பிரசாந்த் கிஷோருக்கு பணம் கொடுத்து தோ்தலை சந்திக்கின்றனா். திமுகவில் மூத்த நிா்வாகிகள் ஓரம் கட்டப்பட்டுள்ளனா். திமுகவில் இருப்பவா்களே, அக்கட்சி மீது கோபத்தில் உள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.