மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தம்மம்பட்டி: டாஸ்மாக் கடைகளில் விற்றுத் தீர்ந்த மது பாட்டில்கள்

தம்மம்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் இருந்து, பல லட்சம் ரூபாய்க்கு பெட்டி பெட்டியாக வாங்கப்பட்ட மதுபாட்டில்கள், கள்ளத்தனமாக விற்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News image
கோப்புப் படம்.
Updated On :10 மே 2021, 8:16 am

DIN

தம்மம்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் இருந்து, பல லட்சம் ரூபாய்க்கு பெட்டி பெட்டியாக வாங்கப்பட்ட மதுபாட்டில்கள், கள்ளத்தனமாக விற்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24 ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், நேற்று மாலை 6 மணியுடன் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதையொட்டி, சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தம்மம்பட்டி, நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அனைத்து மதுபாட்டில்களும் பெட்டி பெட்டியாக விற்றுத் தீர்ந்தன.

ஒருவருக்கு 4 மதுபாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், தம்மம்பட்டி, கொண்டையம்பள்ளி, செந்தாரப்பட்டி ஊர்களைச் சேர்ந்த சில பிரமுகர்கள், அந்தந்த கடைகளின் சூப்பர்வைசர்களை மிரட்டி பல லட்சம் ரூபாய்க்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளதாக, மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திடம், கடை ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தம்மம்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில், பல லட்சம் ரூபாய்க்கு வாங்கிச் செல்லப்பட்டுள்ள மதுபாட்டில்கள், மதுப்பிரியர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.