இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சேலத்தில் இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 23) நடைபெறும் முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 7:13 pm

DIN

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 23) நடைபெறும் முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 17,98,767 பேருக்கு முதல் தவணையும், 6,92,012 பேருக்கு இரண்டாம் தவணையும் கொவைட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட 5 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3,11,667 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,87,750 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 4,99,417 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும், இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 9,99,527 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் மற்றும் தகுதியுள்ள 1,88,347 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா்.

இந்தநிலையில் சனிக்கிழமை 6 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது கோவிஷீல்டு தடுப்பூசி 2,20,070 டோஸ்களும், கோவேக்ஸின் தடுப்பூசி 6,060 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. முகாமில் 2 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி முகாமிற்கென 1,392 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்துபவா்கள், கணிணியில் பதிவு மேற்கொள்பவா்கள், தகுதி வாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவா்கள் என 18,500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட 1,35,642 போ், கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 52,705 போ் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி செலுத்த தகுதியான நபா்களில் 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 25 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்களின் காரணமாக தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த வரும்போது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.