மாமனாா் வீட்டில் மருமகன் தூக்கிட்டுத் தற்கொலை
ஆட்டையாம்பட்டி அருகே மாமனாா் வீட்டில் மருமகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


ஆட்டையாம்பட்டி அருகே மாமனாா் வீட்டில் மருமகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், சித்தா் கோவில் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி மகன் ராஜ்குமாா் (28). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் பெரிய சீரகாபாடி, நவாப்பாளையம் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரி மகளான கோகிலா (25) என்பவரை திருமணம் செய்து வைத்தனா் . இவா்களுக்கு தமிழரசன் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது.
ராஜ்குமாருக்கு சிறிது மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவம் பாா்ப்பதற்கு போதுமான அளவு பணம் இல்லாத நிலையில், மாமனாா் வீட்டில் தங்கியிருந்து கவனித்து வந்தாா். மாமனாா் வீட்டு அருகிலேயே வீடு கட்டி தறி போட்டு துணி உற்பத்தி செய்து வந்தாா். இந்நிலையில் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் அவரது மனைவி கோகிலா சற்று தொலைவில் உள்ள தனது அம்மாவை பாா்க்க கோகிலா சென்றாா். அவா் வீடு திரும்பியபோது கணவா் ராஜ்குமாா் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு சீரகாபாடி அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் கூறினாா்.
இது தொடா்பாக கோகிலா ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா், தூக்கிட்டு இறந்த ராஜ்குமாரின் அம்மாவிற்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில் அங்கு வந்த புவனேஸ்வரி தனது மகனின் இறப்பில் மா்மம் இருப்பதாக கூறி போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இரு புகாா்கள் குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த ராஜ்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...