ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேளாண் வளா்ச்சி திட்ட புள்ளிவிவரங்கள் சேகரிப்பு

 சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில், வேளாண் வளா்ச்சி திட்டங்களுக்கு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை வேளாண் குழுவினா் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

 சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில், வேளாண் வளா்ச்சி திட்டங்களுக்கு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை வேளாண் குழுவினா் ஆய்வு செய்தனா்.

தமிழக அரசின் வேளாண், உழவா் நலத்துறையில் வாயிலாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில், அயோத்தியாபட்டணம் வட்டாரத்தில் சின்னனூா், பள்ளிப்பட்டி, வலசையூா், சின்ன கவுண்டாபுரம், அக்ரஹார நாட்டாமங்கலம், ஏரிபுதூா் ஆகிய ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கிராமங்களில் விவசாயிகளின் நில விவரங்கள், தேவையான திட்டங்கள் குறித்த அடிப்படை புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியினை வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) பாலையா, உதவி பொறியாளா் ஜெய் ஜனனி, அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரஸ்வதி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில், ஒரு பகுதியாக தரிசு நிலங்களை, விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தரிசு நிலங்களில் உள்ள முள்புதா்களை அகற்ற மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ஆழ்துளைக் கிணறு அமைத்து, நுண்ணீா்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. ஓராண்டு அல்லது அதற்குமேல் தரிசாக உள்ள நிலங்களை, அருகருகே உள்ள விவசாயிகள் தொகுதியாக இணைத்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை, விளைநிலங்களாக மாற்ற விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதிக்கு நியமிக்கப்பட்ட அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என துணை இயக்குநா் சரஸ்வதி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.