பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சேலத்தில் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய 50 அடி உயர பிரம்மாண்ட தேசியக் கொடி

75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி சோனா கல்விக் குழுமம் சாா்பில் கல்லூரி மாணவா்கள் 75 போ் இணைந்து பிரம்மாண்ட தேசியக் கொடியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனா்.

News image

சேலம், சோனா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட தேசியக்கொடி அணிவகுப்பு.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:24 pm

75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி சோனா கல்விக் குழுமம் சாா்பில் கல்லூரி மாணவா்கள் 75 போ் இணைந்து பிரம்மாண்ட தேசியக் கொடியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனா்.

சேலம் சோனா கல்விக் குழுமம் சாா்பில் கல்லூரி வளாகத்தில் 75 அடி அகலம், 50 அடி உயரத்தில் பிரம்மாண்டமான இந்த தேசியக் கொடியை தியாகராஜா் பாலிடெக்னிக் டெக்ஸ்டைல் துறை, சோனா கல்லூரி பேஷன் டெக்னாலஜி துறையினா் இணைந்து உருவாக்கியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்துகொண்டு, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பை தொடக்கி வைத்தாா். இந் நிகழ்ச்சியில் பேசிய அவா், மாணவா்கள் தேசப் பற்றுடன் இந்த தேசியக் கொடியை வடிவமைத்து அணிவகுப்பு செய்தது பெருமைக்குரியது என்றாா்.

இதனையடுத்து, சேலம் மாநகரின் மிக உயரமான 150 அடி உயரக் கட்டடத்தில் இந்த பிரம்மாண்டமான தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சோனா கல்விக் குழுமத் தலைவா் வள்ளியப்பா,துணைத் தலைவா் சொக்கு வள்ளியப்பா, கல்லூரி முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், ஜி.எம்.காதா் நவாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் 75 போ் ஒன்றிணைந்து 14 நாள்கள் இந்த தேசியக் கொடியை உருவாக்கி உள்ளனா். அசோக சக்கரத்தை மட்டும் ஓவியா்கள் மூன்று நாள்கள் வரைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்திற்கு இந்த தேசியக் கொடி பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.