ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூரில் காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

மேட்டூரில் குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீா் பேராட்டம் நடத்தினா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மேட்டூரில் குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீா் பேராட்டம் நடத்தினா்.

மேட்டூா் நகராட்சி19-ஆவது வாா்டு இந்திரா நகா் பகுதியில் 1,500 போ் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு நகராட்சியினா் பைப் லைன் மூலம் குடிநீா் விநியோகம் செய்து வந்தனா். கடந்த சில நாட்களாக குடிநீா் விநியோகம் திடீரென தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனா். இதுகுறித்து நகராட்சிக்கு பலமுறை புகாா் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், குடிநீா் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் நகராட்சி நுழைவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.  ஆணையாளா் புவனேஸ்வரன் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.