மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சங்ககிரி அருகே தண்ணீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் பலி

சங்ககிரி வட்டம் வைகுந்தம்  பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு  சகோதரிகள் குட்டையில் மூழ்கி இறந்தனர்...

News image
வைகுந்தம் பகுதியில் உள்ள நல்ல தண்ணி குட்டையில் சனிக்கிழமை தண்ணீரில் மூழ்கி இரு சகோதரிகள் உயிரிழந்த இடத்தில் விசாரணை நடத்தி வரும் சங்ககிரி காவல்துறையினர்.
Updated On :14 மே 2022, 10:46 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம்  பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் அப்பகுதியில் உள்ள குட்டையில் சனிக்கிழமை குளித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் அருகே உள்ள காசிமாரியூர் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த ரோடு ரோலர் ஓட்டுநர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இவர்கள் கடந்த வாரம் தற்காலிகமாக வைகுந்தம் அக்ரஹாரம் பகுதியில் குடும்பத்துடன் குடியேறி வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பிரியா (16),  துளசி (11) என்ற இரு பெண் குழந்தையும்,  சுரேஷ்(12) என்ற மகனும் உள்ளனர். பிரியா வைகுந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பும், துளசி வைகுந்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பும் பயின்று வந்தனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் இருவரும்  கூலி வேலைக்கு சென்று விட்டதையடுத்து  பிரியா, துளசி இருவரும் வைகுந்தம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள நல்ல தண்ணி குட்டையில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் இரு பெண்கள், குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.