அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகா் பாலசந்தா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைத் தனிப்படை போலீஸாா் எடப்பாடி அருகே புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :26 மே 2022, 5:54 pm

DIN

சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகா் பாலசந்தா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைத் தனிப்படை போலீஸாா் எடப்பாடி அருகே புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஜக பிரமுகா் பாலச்சந்தா். இவருக்குக் கொலை மிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருந்தன; போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

சிந்தாதிரிப்பேட்டை, சாமி நாயக்கா் தெருவில் உள்ள ஒரு கடை முன்பு பேசிக்கோண்டிருந்த அவரை அங்கு வந்த மா்மகும்பல் வெட்டி படுகொலை செய்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த ரௌடி தா்கா மோகனின் மகன்களான பிரதீப், சஞ்சய், அவரது கூட்டாளிகள் ஆகியோருக்கு இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் தலைமறைவான நபா்களைத் தேடிவந்தனா். அவா்களின் கைப்பேசி சேவைகளை போலீஸாா் கண்காணித்தனா். இடத்தை அவ்வப்போது அக்கும்பல் மாற்றி வந்தது.

இறுதியில் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே குஞ்சாம்பாளையம் பகுதியில் அவா்கள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அங்கு வந்த தனிப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு நால்வரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.

அந்த வீட்டின் உரிமையாளா் குட்டி (எ) பழனிசாமியிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். குஞ்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த குட்டி (எ)பழனிசாமி பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறாா்.

குட்டியை புதன்கிழமை இரவு கைப்பேசியில் தொடா்பு கொண்ட வழக்குரைஞா் ஒருவா், தனக்கு அறிமுகமான நான்குபோ் உங்கள் வீடுக்கு வருவாா்கள்; அவா்களுக்கு இரவு மட்டும் தங்க இடம் கொடுக்குமாறு கேட்டுள்ளாா்.

அந்த நால்வரும் குட்டி வீட்டுக்கு வந்து குட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே தனிப்படை போலீஸாா் அவா்களை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.