அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கட்டிநாயக்கன்பட்டி ஏரியில் சாயக் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

சாயக் கழிவுகள் கட்டிநாயக்கன்பட்டி ஏரியில் கலப்பதை தடுக்கக் கோரி ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
கட்டிநாயக்கன் பட்டி ஏரியில் சாயக் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
Updated On :5 செப்டம்பர் 2022, 8:01 am

DIN

சாயக் கழிவுகள் கட்டிநாயக்கன்பட்டி ஏரியில் கலப்பதை தடுக்கக் கோரி ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் பேரூராட்சியை ஒட்டி உள்ளது கட்டிநாயக்கன்பட்டி ஏரி. இந்த ஏரியில் ஜலகண்டபுரம் பேரூராட்சியில் உள்ள சாயப்பட்டறைகளின் கழிவு நீரும், சாக்கடை தீரும் கலக்கிறது. இதனால் ஏரி நீர் மாசடைவதோடு நிலத்தடி நீரும் மாசடைகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள், பாசன கிணறுகள் நீர் மாசடைந்து பயனற்றதாகிவிட்டது. இந்தப் பகுதியில் உள்ள நிலத்தடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் நோய் தொற்று ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாயக் கழிவுகளும் சாக்கடை நீரும் ஏரியில் கலப்பதை தடுத்து பொதுமக்களை நோயில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட சிபிஐஎம் செயலாளர் சண்முகராஜா கண்டன உரையாற்றினார்.

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் இடப்பட்டது. ஜலகண்டாபுரம் பேரூராட்சி கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அல்லது பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை மனுக்களை அளிக்க வந்தபோது அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.  இதனால் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டோர் நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.