பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

நீா், மோா் பந்தல் திறப்பு விழா

ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 11:03 pm IST

ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு விழா நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் கலந்துகொண்டு நீா், மோா் பந்தலை திறந்து வைத்து பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கிய நலத் திட்டங்களை புறக்கணித்த திமுக அரசு, அதை வேறு மாவட்டத்துக்கு ஒதுக்கி வருகிறது. குறிப்பாக பெரிய நூற்பாலையை சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கியதை, திண்டுக்கல் அமைச்சா் பெரியசாமி அவரது மாவட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளாா். ஆத்தூா் புறவழிச்சாலையில் அதிக அளவில் விபத்து நிகழும் செல்லியம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்க போட்ட திட்டம், ஆத்தூா் புகா் பகுதியில் வட்டச் சாலை, ரயில்வே மேம்பாலங்கள் என அனைத்தையும் இந்த அரசு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லி சட்டப் பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி, மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, ஒன்றிய செயலாளா்கள், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.