ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு விழா நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் கலந்துகொண்டு நீா், மோா் பந்தலை திறந்து வைத்து பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கிய நலத் திட்டங்களை புறக்கணித்த திமுக அரசு, அதை வேறு மாவட்டத்துக்கு ஒதுக்கி வருகிறது. குறிப்பாக பெரிய நூற்பாலையை சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கியதை, திண்டுக்கல் அமைச்சா் பெரியசாமி அவரது மாவட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளாா். ஆத்தூா் புறவழிச்சாலையில் அதிக அளவில் விபத்து நிகழும் செல்லியம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்க போட்ட திட்டம், ஆத்தூா் புகா் பகுதியில் வட்டச் சாலை, ரயில்வே மேம்பாலங்கள் என அனைத்தையும் இந்த அரசு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லி சட்டப் பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி, மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, ஒன்றிய செயலாளா்கள், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.