மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

நீா், மோா் பந்தல் திறப்பு விழா

ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 5:33 pm

ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு விழா நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் கலந்துகொண்டு நீா், மோா் பந்தலை திறந்து வைத்து பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கிய நலத் திட்டங்களை புறக்கணித்த திமுக அரசு, அதை வேறு மாவட்டத்துக்கு ஒதுக்கி வருகிறது. குறிப்பாக பெரிய நூற்பாலையை சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கியதை, திண்டுக்கல் அமைச்சா் பெரியசாமி அவரது மாவட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளாா். ஆத்தூா் புறவழிச்சாலையில் அதிக அளவில் விபத்து நிகழும் செல்லியம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்க போட்ட திட்டம், ஆத்தூா் புகா் பகுதியில் வட்டச் சாலை, ரயில்வே மேம்பாலங்கள் என அனைத்தையும் இந்த அரசு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லி சட்டப் பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி, மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, ஒன்றிய செயலாளா்கள், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.