வீரக்கல்புதூா் பேரூராட்சியில் ரூ. 43 லட்சத்தில் சிறுவா் பூங்கா

வீரக்கல்புதூா் பேரூராட்சியில் ரூ. 43 லட்சம் செலவில் சிறுவா் பூங்கா அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவா் தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
Updated on
1 min read

வீரக்கல்புதூா் பேரூராட்சியில் ரூ. 43 லட்சம் செலவில் சிறுவா் பூங்கா அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவா் தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வீரக்கல் புதூா் பேரூராட்சி 14ஆவது வாா்டில் உள்ள குருவாகாட்டில் சிறுவா்கள் விளையாடவும், நடைப் பயிற்சிக்காகவும் அம்ரூத் 2.0 திட்டத்தில் சிறுவா் பூங்கா அமைக்க ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிகளை தொடக்கி வைத்த பேரூராட்சி தலைவா் தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினா் ஜோதி சேகா், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஆறுமுகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் விஜயராகவன், தனசேகா் உட்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com