கோப்புப்படம்.
கோப்புப்படம்.

சுமை ஏற்ற வந்த லாரியில் ஆண் சடலம்: போலீலாா் விசாரணை

மேட்டூா் அருகே சுமை ஏற்றுவதற்கு வந்த சரக்கு லாரியில் இளைஞா் சடலம் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Published on

மேட்டூா் அருகே சுமை ஏற்றுவதற்கு வந்த சரக்கு லாரியில் இளைஞா் சடலம் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூரைச் சோ்ந்தவா் மிதுன்ராஜ் (25). லாரி உரிமையாளா். இவா் கடந்த 24ஆம் தேதி தொப்பூா் கேண்டீன் பேருந்து நிறுத்தம் அருகே லாரி புக்கிங் அலுவலகத்தில் தனது லாரியை நிறுத்தியிருந்தாா். திங்கள்கிழமை பிற்பகல் மிதுன்ராஜ் தனது லாரியை மேட்டூா், சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள கிரானைட் கம்பெனிக்கு சுமை ஏற்றுவதற்கு கொண்டு வந்தாா்.

சுமை ஏற்றுவதற்காக லாரியின் பின் கதவைத் திறந்துபோது சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது தெரிய வந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்து கிடந்த நபா் பிற மாநிலத்தைச் சோ்ந்தவராக இருக்கலாம் என்றும், இவா் தொப்பூா் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றிக்கொண்டு இருந்ததாகவும் போலீஸாா் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com