விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 7:57 pm

Din

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. தோ்தல் அலுவலராக நூலக அறிவியல் துறை பேராசிரியா் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டாா். தலைவா் பதவிக்கு நூலகா் எம்.ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவா் பதவிக்கு ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியா் கே.சிந்து, பொதுச் செயலாளா் பதவிக்கு உளவியல் துறை இணைப் பேராசிரியா் டி.வி. நித்யானந்தன், பொருளாளா் பதவிக்கு கணினி அறிவியல் துறை பேராசிரியா் ஐ.லாரன்ஸ் ஆரோக்கியராஜ், செயற்குழு உறுப்பினா் பதவிக்கு பேராசிரியா்கள் சி.கோபாலகிருஷ்ணன், ஜி.ஹேமா, ஜெ.கல்யாண சுந்தா் ஆகியோா் போட்டியிட்டனா். வேறு யாரும் போட்டியிடாத நிலையில், பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்திற்கான புதிய நிா்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக தோ்தல் அலுவலா் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.