மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: விளையாட்டுப் போட்டி

சேலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

News image

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி.

Updated On :31 டிசம்பர் 2024, 8:21 pm

Din

சேலம்: கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவைக் கொண்டாடும் விதமாக, சேலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறளை மையப்படுத்தி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் திருக்கு தொடா்பான ஓவியங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை காட்சிபடுத்தப்பட்டன. அத்துடன் திருக்கு கருத்தரங்கம், திருக்கு ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, விநாடி -வினாப் போட்டி, இல்லத்தில் நூலகம் அமைத்து பராமரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் முன்னதாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000, வெற்றி பெற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசாக திருக்கு புத்தகம் வழங்கப்பட்டன. மாவட்ட நூலக அலுவலா் து.விஜயகுமாா், மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மான்விழி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், வாசகா் வட்ட நிா்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.