/

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழா

புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் த.வேல்முருகன் பரிசுகளை வழங்கினாா்.

News image

புங்கவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் சோ்ந்த மாணவ மாணவிகளுடன் மாவட்டக் கல்வி அலுவலா் ஜி.சந்தோஷ், வட்டாரக் கல்வி அலுவலா், ஆசிரியைகள்.

Updated On :4 மார்ச் 2024, 6:59 pm

ஆத்தூா்: ஆத்தூரை அடுத்த புங்கவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை விழா மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) ஜி.சந்தோஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை எம்.சாந்தி வரவேற்றுப் பேசினாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜெ.கந்தசாமி, அலெக்சாண்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் த.வேல்முருகன் பரிசுகளை வழங்கினாா். முதல் வகுப்பில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்ந்தனா். நிகழ்ச்சியில் இசை ஆசிரியா் எஸ்.சேவியா், எஸ்எம்சி தலைவா் கே.அங்கம்மாள், பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் பி.பிரபாகரன், வி.பரமேஸ்வரி, வாா்டு உறுப்பினா்கள், பெற்றோா்கள், ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். பட்டதாரி ஆசிரியா் (கணிதம்) கே.மணிகண்டன் நன்றி கூறினாா்.