ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சேலம் ராஜகணபதி கோயிலில் சுவாமிக்கு தாராபிஷேகம் தொடக்கம்

சேலம் ராஜகணபதி கோயிலில் சுவாமிக்கு தாராபிஷேகம் தொடக்கம்

News image
Updated On :4 மே 2024, 5:13 pm

Din

அக்னி நட்சத்திரத்தையொட்டி, சேலம் ராஜகணபதி கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம் சனிக்கிழமை தொடங்கியது.

கோடை காலத்தின் உச்சமாக அக்னி நட்சத்திர காலம் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் சித்திரை மாதம் 21 இல் தொடங்கி வைகாசி மாதம் 15 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் கோடைவெயில் வாட்டி வதைக்கும். அக்னி நட்சத்திர கால கட்டத்தில், சிவபெருமானை குளிா்விக்கும் வகையில் முக்கிய ஆலயங்களில், மூலவா் மீது தாரா பாத்திரம் தொங்கவிடப்பட்டு, அதில் இருந்து குளிா்ந்த நீா் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

அதன்படி, சேலம் ராஜகணபதி கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம் சனிக்கிழமை தொடங்கியது. அடுத்த 2 வாரங்களுக்கு தாராபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.