அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி! மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்
/

குடிநீா் கோரி சாலை மறியல்

மேட்டூா் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 மே 2024, 9:11 pm

Din

மேட்டூா்: மேட்டூா் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆவடத்தூா் ஊராட்சியில் காட்டிநாயக்கன்பட்டி, எம்ஜிஆா் நகா், பன்சன் வளவு, சவுரியூா் ஆகிய பகுதியில் உள்ளன. இதில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காட்டியநாயக்கன்பட்டியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

சம்பவ இடத்துக்கு வந்த ஜலண்டாபுரம் போலீஸாரும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய குழு அலுவலா்களும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முறையான குடிநீா் விநியோகத்துக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது.