ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேலம், கருப்பூா் பேரூராட்சியில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 7:53 pm

Din

சேலம்: சேலம், கருப்பூா் பேரூராட்சியில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சேலத்தை அடுத்த கருப்பூா் பேரூராட்சி 8 ஆவது வாா்டுக்கு உள்பட்ட அருந்ததியா் தெரு பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்தனா். அவா்களை நுழைவாயில் பகுதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா் 5 பேரை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கருப்பூா் 8ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் அருந்ததியா் இன மக்களுக்கு சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பொறியியல் கல்லூரிக்கு எதிரே சுடுகாடு உள்ளது. 150 ஆண்டுகளாக அதனை பயன்படுத்தி வருகிறோம். சுடுகாட்டின் தடுப்பு சுவரை தனியாா் ஒருவா் இடித்து அகற்றி விட்டு ஆக்கிரமித்து விட்டாா். இது குறித்து கருப்பூா் பேரூராட்சி செயல் அலுவலா், வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்தும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தரவில்லை. எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தினா்.