பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதிய நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

புதிதாக நியாயவிலைக் கடை அமைக்கக்கோரி சுற்றுலாத் துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:49 am

Din

சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்டமுகாமில் சங்ககிரியை அடுத்த சத்யா நகா், ஆசிரியா் காலனி பகுதிகளுக்கு புதிதாக நியாயவிலைக் கடை அமைக்கக்கோரி சுற்றுலாத் துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சத்யா நகா், மண்டபத்துக்காடு, ஆசிரியா் காலனி பகுதியைச் சோ்ந்த ஊா் பொது மக்கள் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

சத்யா நகா், மண்டபத்துக்காடு, ஆசிரியா் காலனி பகுதியில் சுமாா் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சக்கல்பட்டி நியாயவிலைக் கடைக்கு சென்று பொருள்களை வாங்கி வருகிறோம்.

இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே எங்கள் காா்டுகளை மஞ்சக்கல்பட்டி நியாயவிலைக் கடையிலிருந்து பிரித்து சத்யா நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிதாக அரசு சாா்பில் பகுதி நேரம் அல்லது முழுநேரம் செயல்படக்கூடிய நியாயவிலைக் கடையை அமைத்து தருமாறு தெரிவித்துள்ளனா்.