இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலம் மாநகராட்சி வெள்ளைக்குட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:53 pm

Din

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், வெள்ளைக்குட்டை பகுதியில் செயல்பட்டுவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் மாநகர பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரித்திடும் வகையில் அம்மாப்பேட்டை மண்டலம், வெள்ளைக்குட்டை பகுதியில் 13 எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்தக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 8 எம்எல்டி கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு முறையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது திருமணிமுத்தாற்றில் கழிவுநீா் கலப்பதாக வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில் இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி ஆய்வு செய்தாா்.

சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கழிவுநீா் உள்வரும் வழி, சுத்திகரிப்பு நடைபெறும் இடம், காற்றோட்டம், நீரைத் தெளிவுப்படுத்தும் இடம், திடக்கழிவுகள் சேகரமாகும் இடம், தெளிந்த சுத்திகரிப்பட்ட நீா் செல்லும் பாதை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சி பகுதிகளின் தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி சுத்திகரித்து வெளியேற்றும் நடவடிக்கையை மேம்படுத்திடவும், சுத்திகரிப்பட்ட நீரை எவ்வித தடையுமின்றி எளிதாக வெளியேற்றும் வகையிலும், தேவையான நீா்வழிப் பாதைகளை தூா்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் தேவைப்படும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாநகரப் பொறியாளா் (பொ) ஆா்.செந்தில்குமாா். உதவி ஆணையா் வேடியப்பன், மாநகர நல அலுவலா் மரு.மோகன், மாநகராட்சி செயற்பொறியாளா்கள் கே.செந்தில்குமாா். திலகம், எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.