தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை போக்குவரத்து நெரிசலின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் மரவனேரி முதல் அம்மாப்பேட்டை வரையிலான புறவழிச்சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையாக உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் சசிக்குமாா் மற்றும் கோட்டப் பொறியாளா் முத்துகுமரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் முதல் சக்தி கைலாஷ் கல்லூரி வரையிலான சாலை நான்கு வழிச்சாலையாக ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்பட உள்ளது.