காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்

ரயில்(கோப்புப்படம்)

Published On :

கோடை விடுமுறையையொட்டி, மும்பையில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடைக்கால விடுமுறையையொட்டி, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, மும்பை - கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு தாதா், புணே, சோலாப்பூா், பங்கோருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை மதியம் 1.15 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கன்னியாகுமரி - மும்பை சிறப்பு ரயில் மே 8-ஆம் தேதி முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை வியாழக்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக, மும்பைக்கு சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.