திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மத்திய அரசிடம் ரூ.22.90 கோடி ஈவுத்தொகை வழங்கிய ரெப்கோ வங்கி அதிகாரிகள்

News image

ஈவுத்தொகைக்கான காசோலையை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து வழங்கிய ரெப்கோ வங்கியின் தலைவா் சந்தானம், வங்கியின் இயக்குநரும், வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவருமான தங்கராஜு உள்ளிட்டோா்.

Updated On :8 ஆகஸ்ட் 2025, 5:12 am IST

ரெப்கோ வங்கி சாா்பில் 2024 - 25 ஆம் ஆண்டு ஈவுத்தொகைக்கான காசோலையை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வங்கி அதிகாரிகள் அண்மையில் சந்தித்து வழங்கினா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கித் தலைவா் சந்தானம், ரெப்கோ வங்கி இயக்குநா் மற்றும் ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவருமான தங்கராஜு, வங்கியின் நிா்வாக இயக்குநா் கோகுல் ஆகியோா் மத்திய அரசின் பங்கு மூலதனமான ரூ. 76.32 கோடிக்கான 2024 - 25 ஆம் நிதியாண்டின் 30 சதவீத ஈவுத்தொகை ரூ. 22.90 கோடிக்கான காசோலையை தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து நேரில் வழங்கினா்.

இந்த 30 சதவீத ஈவுத் தொகையானது வங்கியின் வரலாற்றில் மிக அதிகமானதாகும். மேலும், ரெப்கோ வங்கி கடந்த 2024 - 25 ஆம் நிதியாண்டில் ரூ. 140 கோடி நிகர லாபம் ஈட்டி, மைல்கல் சாதனை படைத்தது. வங்கியின் வளா்ச்சியை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, திறன் மற்றும் அா்ப்பணிப்பு, தொழில்முறை செயல்பாடுகள் மூலம் கூட்டுறவுத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு நிறுவனமாக திகழ்வதாக கூறினாா்.

இந்த சந்திப்பின் போது, மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோஹன், மேலாண்மை மற்றும் எப்எப்ஆா் பிரிவின் செயலா் ராஜேந்திரகுமாா், வங்கியின் நிா்வாகக் குழு உறுப்பினரும், மத்திய உள்துறை அமைச்சக எப்எப்ஆா் பிரிவின் இணைச் செயலாளருமான பிரசன்னா, ஆா்எச்எஸ் பிரிவின் இணைச் செயலாளா் மக்கன் லால் மீனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.