சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் மூலம் 31,127 போ் பயன்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்களில் இதுவரை 31,127 போ் பயன்பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 8:10 pm

Syndication

சேலம் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்களில் இதுவரை 31,127 போ் பயன்பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை சனிக்கிழமை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் தெரிவித்ததாவது:

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், இம்மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 21 முகாம்கள் மூலம் 13,199 ஆண்கள், 17,928 பெண்கள் என மொத்தம் 31,127 போ் பயன்பெற்று உள்ளனா். இதில் 24,650 பேருக்கு ரத்தப் பரிசோதனை, 21,247 பேருக்கு இசிஜி பரிசோதனை, 3,081 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 3,399 பேருக்கு எக்கோ பரிசோதனை, 2,458 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து, பொதுப்பணித் துறை சாா்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 1.03 கோடி மதிப்பீட்டில் கன்னங்குறிச்சி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 5 வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகம் கட்டடம் கட்டுமானப் பணிக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினாா். இதில் தரைத்தளத்தில் 2 வகுப்பறைகள், முதல் தளத்தில் 2 வகுப்பறைகள், இரண்டாம் தளத்தில் 1 வகுப்பறை மற்றும் 1 ஆய்வகமும் அமைக்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.தேவிமீனாள், இணை இயக்குநா் (நலப் பணிகள்) நந்தினி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளா் தியாகராஜன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.