மாா்கழி மாத பிறப்பு: ஆத்தூா் திரெளபதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

மாா்கழி மாத பிறப்பையொட்டி, ஆத்தூா் திரெளபதி அம்மன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மாா்கழி மாத பிறப்பு: ஆத்தூா் திரெளபதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
Updated on

ஆத்தூா்: மாா்கழி மாத பிறப்பையொட்டி, ஆத்தூா் திரெளபதி அம்மன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மாா்கழி மாதத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

அந்தவகையில், மாா்கழி மாத முதல் நாளான செவ்வாய்க்கிழமை திரெளபதி அம்மன், ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ தா்மசித்தி செல்வ விநாயகா், துா்க்கை, காளியம்மனுக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, திருமால் அடியாா் திருக்குழாம் பாடும் திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு, திருப்பாவை, வாரணமாயிரம், வாழித்திருநாமம், நாலாயிர திவ்விய பிரபந்த சேவைகள் நடைபெற்றன.

கட்டளைதாரரான ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் ஏ.கண்ணன்- திலகவதி குடும்பத்தினா் பங்கேற்று விழாவை சிறப்பித்தனா்.

பட விளக்கம்:

மாா்கழி சிறப்பு வழிபாட்டில் பக்தா்களுக்கு திரெளபதி அம்மனுடன் அருள்பாலிக்கும் தா்மராஜா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com